சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நாம் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஞானத்தை கரிகாலன் ஏமாற்றி விடுகிறார். திருட்டு சரக்குகளை கொண்டு வந்து கடையில் வைத்ததால், போலீசார் வந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு செல்கின்றனர். இதனால் கோபமடையும் ஒரு ரேணுகா ஞானத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுகிறார். கரிகாலனிடம் ஏமாந்த ஞானம் நடுரோட்டில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேணுகாவின் தாயார் பதினைந்து லட்சம் ரூபாயை கொண்டு வந்து ஞானத்தின் கையில் கொடுத்து, ஏதாவது புது தொழில் தொடங்கிக் கொள்ளுமாறு கூற, ஞானமும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அப்போது கரிகாலன் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர் புது தொழிலை தொடங்குகிறார். எக்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த அவரின் கடை துவக்க விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது போலீசார் அங்கு வந்து இது அனைத்தும் திருட்டு சரக்கு என்று அனைத்தையும் எடுத்து செல்கின்றனர். இதனால் ஏமாற்றமாக உணரும் ஞானம் அழுது கொண்டிருக்கிறார்.

கரிகாலனிடம் ஏமாந்த ஞானத்தை அவரது மனைவி ரேணுகா கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV