விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரின் திருமண ஏற்பாடுகள் நடந்து வரும்போது, கடன் காரர்கள் தங்கமயில் வீட்டில் பிரச்சனை செய்கின்றனர். அப்போது அங்கு வரும் பாண்டியன் குடும்பத்தினருக்கு தங்கமயில் குறித்த உண்மைகள் தெரிய வருகிறது. இதனால் சரவணன் தங்கமயில் திருமணம் நடைபெறுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கமயில் குடும்பத்தினர் ஒரு மோசடி பேர்வழி என்பதை தெரியாமல் பாண்டியனின் குடும்பத்தினர் தற்போது அவருடன் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். தங்கமயில் மற்றும் சரவணன் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தங்கமயில் சரவணன் திருமணத்திற்காக பாண்டியன் குடும்பத்தினர் தங்கமயில் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அந்த நேரம் பார்த்து தங்கமயில் வீட்டிற்கு கடன் கொடுத்தவர்கள் வந்து பிரச்சனை செய்கின்றனர்.

இதைப் பார்த்த தங்கமயில் தனக்கு இனி திருமணமே நடக்காது என்று சொல்லி கண் கலங்கி அழுது கொண்டிருக்கிறார். இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்ய போகின்றனர்? தங்க மயிலுக்கும் சரவணனுக்கும் திருமணம் நடக்குமா? என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television