நடிகர் விஜய் புதியதாக தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை இன்று பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார். நீண்ட நாட்கள் இவர் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில், தற்போது கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தி உள்ளார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என கூறிய அவர், இன்று மாநாட்டை நடத்த உள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி ஏரியாவில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதம் மேலாக மாநாட்டுக்கான பணிகள் அங்கு நடந்து வருகிறது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு பணிகளை விரைந்து முடித்து இருக்கிறார். அதன்படி இன்று மாநாட்டிற்கு மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி உள்ளது.

மேலும் மாநாடு நடைபெறும் நேரம் மாலை என அறிவிக்கப்பட்டும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக உள்ளே வந்து உள்ளனர்.இதனால் தற்போதே மாநாடு நடைபெறும் இடம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இன்னும் மாலை பொழுதில் மாநாடு நடக்கும் நேரத்தில் மக்கள் கூட்டம் எப்படி இருக்கும் என அச்சம் நிலவி வருகிறது.
Embed Video Credits : ANI MUSIC