திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது உச்சநீதிமன்றம்.

கடந்த வருட இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கொடுமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதேவேளையில் சட்டரீதியான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இச்சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்ய உள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பேப்டே தலைமையிலான அமர்வு இந்த விசாரணையை மேற்கொள்ள உள்ளது. முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க த்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதேசமயம் அரசமைப்புச் சட்டப்படி குடியுரிமை திருத்த சட்டம் சொல்லுமா என ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
மேலும் இச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது ஜனவரி இரண்டாவது வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது .