விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோயிலுக்கு அனைவரும் சென்றிருக்கும் நிலையில் சித்ராதேவியை அமர வைத்து அவரது மண்டையில் தேங்காய்களை உடைக்கின்றனர். மேலும் கௌதம் நாக்கில் அலகு குத்தி அவரையும் கோயிலுக்கு வந்தவர்களிடம் தர்மம் எடுக்க வைக்கின்றனர் அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது இல்லை என கௌதம் பிடிவாதமாக இருக்கும் நிலையில், கௌதமின் டாட்டா சில உத்தரவுகளை போடுகிறார். அதற்கு பயந்து சித்ராவும் கௌதமும் ஐஸ்வர்யாவிற்கு பணிவிடைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர் வந்த நிலையில் ஐஸ்வர்யா நடந்து வரும் வழியில் கௌதம் எண்ணெயை ஊற்றுகிறார். அவரை ராஜலட்சுமி காப்பாற்றுகிறார்.

பின்னர் ஐஸ்வர்யாவுக்கு நேர்த்திக்கடன் என்று சொல்லிவிட்டு சித்ராவை அமர வைத்து அவர் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் கௌதம் நாக்கில் அலகு குத்தி அவரை கோவிலுக்கு வந்தவரிடம் தர்மம் எடுக்கவும் வைத்துள்ளனர்.அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television