ஐஸ்வர்யாவை ஆள் வைத்து கடத்திய கெளதம்.! அதிரடி திருப்பங்களுடன் ஆஹா கல்யாணம் ப்ரோமோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கௌதமுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் கௌதம் ஐஸ்வர்யாவை ஆள் வைத்து கடத்தி விடுகிறார். இந்த செய்தியை கேட்ட கோடீஸ்வரி அதிர்ச்சியில் கீழே விழுந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சூர்யா திருமணம் செய்து கொள்ள இருந்த ஐஸ்வர்யாவை கடைசி நிமிடத்தில் திருமண மண்டபத்தில் இருந்து கடத்தி அவரை கர்ப்பமாக்கி விடுகிறார் கௌதம். இந்த விஷயம் சூர்யா உட்பட அனைவருக்கும் தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாவை ஆள் வைத்து கடத்திய கெளதம்.! அதிரடி திருப்பங்களுடன் ஆஹா கல்யாணம் ப்ரோமோ 1
மேலும் ஐஸ்வர்யா கௌதம் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்ய குடும்பத்தில் உள்ள அனைவரும் சம்மதிக்கின்றனர். ஆனால் இந்த திருமணத்திற்கு கௌதமும் அவரது தாயார் சித்ராவும் துளியும் சம்மதிக்கவில்லை. அவர்களுக்கு பணக்கார வீட்டு பெண் தான் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கௌதம் இன்று ஆட்களை வைத்து ஐஸ்வர்யாவை கடத்துகிறார். திருமண மண்டபத்தில் கூல்ட்ரிங்ஸ் கொடுக்கும் சாக்கில் உள்ளே வந்தவர் ஐஸ்வர்யாவை கடத்துகிறார். பின்னர் ஐஸ்வர்யாவை காணவில்லை என்று கோடீஸ்வரிக்கு தெரிந்து கீழே விழுந்து அழுகிறார்.


கௌதமின் எண்ணம் ஈடேறுமா ஐஸ்வர்யா கௌதம் திருமணம் நடக்குமா என்பதெல்லாம் தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்