தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது தெலுங்கு சினிமாவையும் கலக்கி வருகிறார். இவர் தெலுங்கு நடிக நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருவரும் இணைந்து நடித்ததில் இவர்களுக்கு இடையே காதல் உருவாகி இருந்தது. 2017ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் ஆகிய நிலையில் , திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர்.

விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இருவரும் தனியே வாழ்ந்து வரும் நிலையில் , நாகசைதன்யா, நடிகை சோபிதா உடன் அடிக்கடி டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒரே இடத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நாகசைதன்யா , சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களது திருமண நிச்சயம் இன்று நடைபெற இருப்பதாகவும் தெலுங்கு ஊடகங்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும், உண்மையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.