என்னை அறிந்தால் படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன். பின்னர் விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது கதாநாயகியாக உருவெடுத்து உள்ள இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தற்போது நடிகர் தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் அனிகா சுரேந்திரன். இந்நிலையில் இவர் ஓணம் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சேலையில் இவர் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து உள்ளது . ரசிகர்கள் அனிகாவை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இணையத்தில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
