தாமிரபரணி படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருப்பவர் நடிகை முக்தா. மலையாள சினிமாவில் நடித்து திரைத்துறைக்குள் நுழைந்த இவருக்கு தமிழில் தாமிரபரணி படம் நல்ல வரவேற்பினை கொடுத்து இருக்கிறது. பின்னர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். தாமிரபரணி படத்திற்கு பிறகு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை.

இதனால் சினிமாவை விட்டு விலகினார் முக்தா. பின்னர் திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார். இவருக்கு மகள் ஒருவர் உள்ளார். தற்போது படங்களில் இருந்து முழுவதும் விலகி இருக்கும் இவர், அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தாமிரபரணி பாணுவா இது அடையாளமே தெரியலையே என கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.