விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருபவர் திவ்ய தர்ஷினி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. விஜய் தொலைக்காட்சி ஆரம்பத்தில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது இருக்கும் பல தொகுப்பாளர்களுக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார் திவ்ய தர்ஷினி. பல இசைவெளியீட்டு விழா விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கலக்கியிருக்காரு திவ்ய தர்ஷினி.

சமீபகாலமாக இவர் கால்களில் பாதிப்பு இருப்பதால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். மேலும் பல நிகழ்ச்சிகளுக்கு நடக்கமுடியாமல் வீல் சேரிலும் வந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் வராத திவ்ய தர்ஷினி தற்போது மருத்துவமனையில் இருப்பது போல புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

மேலும் தனக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாகவும், இது தனக்கு நடந்து இருக்கும் நான்காவது அறுவை சிகிச்சை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாடி தனக்கு இந்த சர்ச்சை நடந்து இருப்பதாகவும் , அதிலிருந்து வெளிவர கஷ்டப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். அவர் விரைவில் குணம் பெற வேண்டி ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram