Categories: சினிமா

ஒரு உணர்ச்சியும் இல்லாத மொக்க படம்.! PS -1 மீது வன்மத்தை கக்கிய ஆந்திர பாக்ஸ் ஆபீஸ்.!

வெளியிட்டது

எந்த ஒரு சுவாரசியமும், கவர்ச்சியும் இல்லாத ஒரு சாதாரண வரலாற்றுப் படம் தான் பொன்னியின் செல்வன் என்று ஆந்திரா பாக்ஸ் ஆபீஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு தமிழ் ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாகவே தெலுங்கு ரசிகர்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் இடையே ட்விட்டரில் சண்டை நீடித்து வருகிறது. இது வார்த்தை போராக மாறி இரு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொள்கின்றனர். வார்த்தைகள் சில சமயம் எல்லை மீறியும் செல்கிறது. இந்த நிலையில் இன்று ஆந்திராவைச் சேர்ந்த ஆந்திர பாக்ஸ் ஆபீஸ் என்ற நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் பற்றிய கடுமையான விமர்சனம் ஒன்றை அளித்திருந்தது. அதில் எந்த ஒரு கவர்ச்சியும், சுவாரஸ்யமும் இல்லாத ஒரு சாதாரண வரலாறு படம், உறுதியான கட்டமைப்பு என எதுவுமே இல்லாத படம் என்று பொன்னியின் செல்வன் மீது விமர்சனத்தை வைத்திருந்தது.

ஒரு உணர்ச்சியும் இல்லாத மொக்க படம்.! PS -1 மீது வன்மத்தை கக்கிய ஆந்திர பாக்ஸ் ஆபீஸ்.! 1

தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் இந்த சண்டைக்கு காரணமாக இருந்தது பாகுபலி திரைப்படம் தான். பாகுபலி திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் பொன்னியின் செல்வனில் 60 சதவிகிதம் உண்மையும் 40 சதவிகிதமும் மட்டுமே கற்பனை இருந்தது. மேலும் இது தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் காவியமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் நன்றாக இல்லை, பாகுபலி அளவிற்கு இல்லை என்று முதல் நாள் படம் பார்த்துவிட்டு வந்த பலரும் கருத்து தெரிவித்தனர். இதையே தெலுங்கு ரசிகர்களும் பிடித்துக் கொண்டு பாகுபலி அளவிற்கு இல்லை என்று கூறத் தொடங்கினர்.

ஆனால் பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை இயக்கிய ராஜமவுலியே பொன்னியின் செல்வன் கதையில் இருந்து தான் சில காட்சிகளை சுட்டு பாகுபலி படத்தில் வைத்து இருந்தார் என்ற குற்றச்சாட்டுகளை தமிழர்கள் முன் வைத்தனர். மேலும் அவர்கள் சில மீம்ஸ் போட்டு அந்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தனர். குறிப்பாக ரசிகர் ஒருவர் ராஜமவுலியிடம் சென்று பொன்னியின் செல்வன் கதையைப் படிக்குமாறு கூறிய போது, தான் ஏற்கனவே அந்த கதையை படித்திருப்பதாகவும் பெஸ்ட் டிராமா என்றும் ராஜமவுலி பதிலளித்திருப்பார். அந்த ஸ்கிரீன்ஷாட்க்களை போட்டு தெலுங்கு ரசிகர்களை கலாய்க்க தொடங்கினர் தமிழ் ரசிகர்கள். பொன்னியின் செல்வன் கதையில் இருக்கும் சில காட்சிகளையும் பாகுபலி இருக்கும் சில காட்சிகளின் ஒப்பிட்டு மீம்ஸ் போடவும் தொடங்கினர்.


இந்த நிலையில் ஆந்திரா பாக்ஸ் ஆபீஸ் கூறியுள்ள கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தெலுங்கு ரசிகர்கள் வேண்டுமென்றே பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என்றும், பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் வந்தபோது தமிழர்கள் அதைப் பெருந்தன்மையாக பார்த்தார்கள். ஆனால் தெலுங்கு ரசிகர்களுக்கு அந்த பெருந்தன்மை இல்லை என்றும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்