விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யாவை போல உழைக்க வேண்டும் என்று சொல்லி கோபி இரவு பகலாக உழைக்க தொடங்கி இருக்கிறார். அதை பார்க்கும் ராதிகாவும் அவரது தாயாரும் மிகுந்த கடுப்பில் இருக்கின்றனர். கோபியிடம் ஏதாவது பேச முயற்சித்தால் கூட அவர் பேசாமல் வேலை, வேலை என இருந்து வருகிறார். அந்த ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது செய்து சுனக்கம் ஏற்பட்டுள்ளது. கோபி ராதிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி, அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனையை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். சாப்பாடு சரியில்லை, அது சரியில்லை என்று ஏதாவது ஒரு பிரச்சனையை கிளறிக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் பாக்யா விடியற்காலையில் எழுந்து வேலைக்கு செல்வதை பார்க்கும் கோபி தனது தாயாரிடம் இவளுக்கு வீட்டு வேலை எதுவும் இல்லையா காலையிலேயே வேலை செய்ய கிளம்புகிறாளே என கேட்கிறார்.

அப்போது ஈஸ்வரி அவள் வீட்டு வேலை அனைத்தையும் முடித்துவிட்டு தான் வேலைக்கு செல்வாள் என கூறுகிறார். அதை பார்த்த கோபி தானும் பாக்கியா மாதிரி உழைக்க வேண்டும் என்று சொல்லி இரவு பகலாக உழைக்கத் தொடங்குகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television