தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் முதன் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்கிற தொடரில் நடித்தார். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு குறுகிய காலத்திலேயே வெள்ளித்திரையில் நடக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் பிரியா பவானிசங்கர். மேயாத மான் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான இவர், கடைக்குட்டி சிங்கம் என்கிற படத்தில் நடித்தார். பின்னர் எஸ் ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் என்கிற படத்திலும் பொம்மை என்கிற படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். அருண் விஜயுடன் இணைந்து யானை, ஜெயம் ரவியுடன் இணைந்து அகிலன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். கைவசம் ருத்ரன், பத்து தல போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். தனுஷின் திருச்சிற்றம்பலத்திலும் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார் பிரியா பவானி சங்கர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் 10 ஆண்டுகளாக கல்லூரி காதலர் ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். தற்போது அவருடன் பிரிவு ஏற்பட்டு விட்டதாக பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் பொழுது, ஆபாசம் இல்லாத குடும்ப பங்கான கதைக்களங்களில் நடித்து வருபவர் பிரியா பவானி சங்கர். அவருடைய லட்சியம் ஈசிஆரில் ஒரு பங்களா ஒன்றை கட்டுவது தான். அதையும் முடித்துவிட்டு அந்த பங்களாவில் தனது காதலருடன் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்தார். இந்த தகவலை பிரியா மறுக்கவே இல்லை. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பதற்கு ஏற்ப தற்போது காதலனுடன் பிரியா பவானிசங்கருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. இந்த தகவலை பிரியாவே தனது தோழிகளிடம் சொல்லி இருக்கிறார். தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரியா தோழிகளிடம் பகிர்ந்து இருப்பதாகவும், அந்த தகவல் தனக்கு கிடைத்திருப்பதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

மேலும் கதாநாயகி என்பது ஆபீஸ் வேலை போல இல்லை. போய் இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துவிட்டு வருவது போன்றதில்லை. டூயட் பாட வேண்டும் கதாநாயகனை கட்டிப்பிடிக்க வேண்டும். வெளியூரில் தங்க வேண்டும். இதனால் காதலன் சந்தேகப்பட்டு இவ்வாறு செய்துவிட்டாரா என்பது தெரியவில்லை. நெருங்கிய தோழிகளுடன் காதலன் ஏமாற்றி விட்டதாக புலம்பி இருப்பதாகவும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை பிரியா பவானி சங்கர் வெளிப்படுத்தியதாகவும், திருமணமான பின்பு கூட நடிப்பதற்கு அனுமதி கேட்டதாகவும், அதனால் தான் கருத்து வேறுபாடு என்றும் பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். மேலும் நயன்தாரா போல பல நாட்கள் நடித்துவிட்டு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிரியா கூறி இருப்பார். அதனால் கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கும், அவரது காதலன் வீட்டில் ஏதாவது பிரஷர் கொடுத்து இருப்பார்கள். எப்படியும கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sakthi Cine News