உன் கதை நல்லா இல்லை.! கிளம்பு.! ஜனனியை அழ வைத்த ஹவுஸ் மெட்ஸ்

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதே பிக்பாஸ். பிக்பாஸ் சீசன் 6 தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை 20 பேர் அளவிற்கு கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பி வருகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில் பொதுமக்களில் இருந்து இரண்டு பேரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பி இருக்கின்றனர். குறிப்பாக திருநங்கை ஒருவருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உன் கதை நல்லா இல்லை.! கிளம்பு.! ஜனனியை அழ வைத்த ஹவுஸ் மெட்ஸ் 1

விளம்பரம்

பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே தொடர்ந்து சண்டை, பிரச்சனை என நீடித்து வருகிறது. முதல் நாளே பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. முன்பெல்லாம் குழுவாக விளையாடி லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்களை பெற்று அந்த வாரத்திற்கான உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்வர். ஆனால் இந்த முறை அப்படி இல்லை தனித்தனியாக விளையாட போட்டியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். தனித்தனியாக பெரும் மதிப்பெண்களைக் கொண்டு அவர்கள் உணவு சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும் 4 பேரை நாமினேட் செய்து அவர்களை வெளியில் உள்ள பெட்டில் படுத்து உறங்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறுகிறார் இதனால் சண்டை ஏற்படுகிறது.

தொடர்புடையவை  ரோஜா சீரியல் நடிகைக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

உன் கதை நல்லா இல்லை.! கிளம்பு.! ஜனனியை அழ வைத்த ஹவுஸ் மெட்ஸ் 3

விளம்பரம்

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கதை சொல்லும் போட்டி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கதை சொல்லி முடித்தால் நாமினேஷனில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்று பிக்பாஸ் கூறுகிறார். முதல் ப்ரோமோவில் அசீமை கதை சொல்ல விடாமல் தடுத்த ஹவுஸ் மெட்ஸ் தற்போது ஜனனி பேசும் போதும் விக்ரமன், ஆயிஷா, தனலட்சுமி ஆகியோர் தடுத்து விட்டனர். அதனால் ஜனனியும் கதறி அழுகிறார்.

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment