விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் “பாக்கியலட்சுமி”. தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய பழைய காதலியான ராதிகாவை மணக்க முடிவில் இருக்கிறார் கோபி. கோபியின் மகனுக்கு இந்த விஷயம் தெரிந்தாலும், அதனை தன்னுடைய தாயிடம் நேராக கூறலாம் மறைமுகமாக தெரியப்படுத்தி கொண்டே இருக்கிறான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் சங்கமாக ஒளிபரப்பானது. ஊரில் இருந்து வரும் தனத்திற்கும் மூர்த்திக்கும், கோபி ராதிகாவுடன் இருக்கிற விஷயங்கள் தெரிந்து விட மூர்த்தி முதலில் கோபியிடம் எடுத்து கூற கோபியோ கோவப்பட்டு “இது என்னுடைய வாழ்க்கை, நீ யார் என்னிடம் இப்படி கேள்வி கேட்க” என கத்தி மூர்த்தியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறான்.
கிளம்பும் பொது தனம் பாக்கியவிடம் “கொஞ்சம் பார்த்து இருந்தோங்க” என கூறி சென்று விடுகிறாள். அங்கிருந்த பாக்கியத்திடம் எதுவும் கூற முடியாமல் கிளம்பும் மூர்த்தியும், தனமும் நேராக ராதிகாவிடம் சென்று கோபி நல்லவர் இல்லை, “அவர் உங்களை ஏமாற்றுகிறார்” என கூறிவிட்டு ஊருக்கு செல்கிறார்கள்.

ராதிகாவிற்கும் கொஞ்சம் குழப்பம் ஏற்பட அங்கே வரும் கோபியிடம் “கல்யாணத்திற்கு முன்னப்பு நான் உங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும்” என கோரிக்கை வைக்க கோபி முடியாது என மறுத்து விடுகிறார். கோபமடையும் ராதிகா “அப்போ வெளிய போங்க” என கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.
வீட்டிலோ பாக்கியவும் தனம் ஏன் அவ்வாறு கூறினால்,அவளுடைய மகன் ஏன் தந்தை மீது எப்போதும் குறை கூறி வருகிறான், கோபி அடிக்கடி யாருடன் தனியாக போனில் பேசுகிறாள் என யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள். அவளுக்கும் ஒரு முறை கோபி யாருடனோ “நான் உன்னைத் தான் காதலிக்குறேன்” என பேசியது நினைவிற்கு வர கோபியின் மீதி கொஞ்ச சந்தேகம் வர தொடங்குகிறது.
கோபி கல்யாணம் வரை வந்துள்ள தன்னுடைய வழக்கை எப்படி முடியப்போகிறது என்ற குழப்பத்தில் உள்ளார். இவராக இந்த வாரம் கதை நகர்கிறது.
Video Courtesy – Vijay Television