BSNL Offer: மொத்தம் 1095 ஜிபி டேட்டா + “அன்லிமிடெட்” வாய்ஸ்; பிஎஸ்என்எல்-ன் அடேங்கப்பா பிளான்!

வெளியிட்டது

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆனது இன்னமும் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்று அதன் கட்டண திட்டங்களின் விலைகளை உயர்த்தவில்லை. அதாவது பிஎஸ்என்எல் ஆனது இன்னமும் நல்ல “பழைய” ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது என்று அர்த்தம். 

“அப்படியென்ன நல்ல திட்டங்கள்?” என்று கேட்பவர்களுக்கான சரியான பதில் பிஎஸ்என்எல்-ன் அன்லிமிடெட் திட்டங்கள் தான் சரியான பதிலாக இருக்க முடியும். இது வெறும் ரூ.108 ரூபாயில் தொடங்கி ரூ.1,999 ரூபாய் வரை செல்கின்றன. அதில் 1 நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்! 

வெறும் ரூ.200க்கு தினசரி 2GB டேட்டா; அதுவும் 58 நாட்களுக்கு! ஏர்டெல் & ஜியோவை அடித்து தூக்கும் BSNL!
பிஎஸ்என்எல் வழங்கும் தினசரி 3ஜிபி டேட்டா பிளானின் விலை ரூ.1,699 ஆகும். இது வருகிற டிசம்பர் 31 வரை இயங்கும் நிறுவனத்தின் “எக்ஸ்ட்ரா டேட்டா ஆபரின்” ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் “தற்போதைய” செல்லுபடியாகும் காலம் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 365 நாட்கள் ஆகும். முன்னதாக (நவம்பர 30 வரை) இது கூடுதலாக 60 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஆண்டு திட்டமான ரூ.1,699 ஆனது மொத்தம் 1095 ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளை அனுப்புகிறது. 

முன்னரே கூறியப்படி, பிஎஸ்என்எல் இன் இந்த ரூ.1,699 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமானது 1095 ஜிபி அளவிலான மொத்த டேட்டா நன்மையுடன் அனுப்பப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் பிற நன்மைகளை பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. உடன் இந்த திட்டம் இரண்டு மாதங்களுக்கு பெர்சனலைஸ்டு ரிங்பேக் டோன் நன்மையையும் வழங்குகிறது. 

BSNL 4G: ஒரு நாளைக்கு 10GB; வெறும் ரூ.100 க்கு பிளான்; சத்தமின்றி வேலை பார்த்த பிஎஸ்என்எல்!

தரவு நன்மை குறித்து விரிவாக பேசும்போது, ரூ.1,699 ஆனது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. முன்னதாக பிஎஸ்என்எல் இந்த திட்டத்துடன் வெறும் 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டவையே வழங்கியது. இருப்பினும், அதன் “எக்ஸ்ட்ரா டேட்டா ஆபரின்” ஒரு பகுதியாக, தற்போது இந்த திட்டம் 1 ஜிபி கூடுதல் டேட்டாவோடு வருகிறது. இதே திட்டம் நவம்பர் 30 வரை, ஒரு நாளைக்கு 3.5 ஜிபி டேட்டாவை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஒருபக்கம் ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டம் இருக்க, மறுபக்கம் பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் ரூ.1,999 ரூபாய் திட்டத்தையும் திரும்பக் கொண்டு வந்தது, இது சென்னை மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டங்களில் மட்டுமே அணுக கிடைக்கும் ஒரு திட்டமாக உள்ளது. நன்மைகளை பொறுத்தவரை, ரூ.1,999 ஆனது ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, ஒவ்வொரு நாளும் 250 நிமிட குரல் அழைப்புகள் மற்றும் செல்லுபடியாகும் 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்றவைகளை வழங்குகிறது. உடன் இந்த திட்டத்துடன் சோனிலிவ் சந்தாவும் அணுக கிடைக்கும், இந்த சாந்தாவின் செல்லுபடியாகும்காலம் ரூ.1,999 திட்டத்தின் முழு காலத்திற்கும் நீள்கிறது என்பது கூடுதல் சுவாரசியம். 

பிஎஸ்என்எல் நிறுவனமானது தற்போது இந்தியாவில் நான்காவது பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டராக உள்ளது, இந்நிறுவனத்தின் கீழ் 120 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இது 280 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்குமொறு இடமாகும்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்