இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் கேப்டன். ஏலியன் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழில் வித்தியாசமான கதைகளை கொடுப்பதில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் முதலிடத்தில் இருக்கிறார். இவர் ஏற்கனவே மிருதன், டிக் டிக் டிக், டெடி போன்ற படங்களை இயக்கியிருந்தார். இதில் டெடி படத்தில் ஆர்யா நடித்திருந்தார், படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது ஆர்யாவுடன் மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து கேப்டன் படத்தை இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இந்த படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தன. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

மூன்று நாடுகளை இணைக்கும் இந்தியாவின் ஒரு பார்டர் பகுதியில் ஒரு அடர்ந்த காடு இருக்கிறது. இந்த இடத்திற்கு பெயர் செக்டார் 42. இந்த இடத்தில் மினரல் தொழிற்சாலை ஒன்றே இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலை மூடப்பட்ட பின் 50 ஆண்டுகளாக ஆள் நடமாட்டமே இல்லாத செக்டார் 42ஐ மீண்டும் கைப்பற்ற அரசு நினைக்கிறது. அதற்காக ராணுவத்தின் உதவியை நாடுகிறது. ராணுவத்திடமிருந்து நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட் வந்த பிறகு அந்த இடத்தை கைப்பற்ற அரசு திட்டமிடுகிறது. இதனால் ராணுவம் ஒரு குழுவை அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் அந்த குழு திரும்பி வரவே இல்லை. இதுபோல் அந்த இடத்திற்கு செல்லும் யாருமே திரும்பி வருவதே இல்லை. இதனால் அங்கு நடக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பதற்காக, ஆர்யா தலைமையிலான ஒரு குழுவை ராணுவம் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கிறது. ஆர்யா ஏற்கனவே ராணுவத்தில் பல சாதனைகளை புரிந்து வருவதால், இந்த அசைன்மென்ட் இவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆர்யாவின் குழுவும் அந்த மர்மமான இடத்தை அடைந்து தனது பணிகளை தொடங்குகிறது. முன்பு இறந்தது போலவே ஆர்யாவின் குழுவில் இருந்த ஒருவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து விடுகிறார். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு மறுபடி மீண்டும் அதே இடத்திற்கு ஆராய்ச்சியாளர் சிம்ரன் ஆர்யாவின் குழுவை அழைத்துச் செல்கிறார். அப்போதுதான் ஆர்யாவின் கண்களில் ஒரு வித்தியாசமான உருவங்கள் கண்ணில் படுகிறது. இதன்பின் ஆர்யாவின் டீமுக்கு நடந்தது என்ன? ஆர்யாவின் கண்களில் அந்த உருவம் மாட்டியது எப்படி? அதை எப்படி தனது குழுவினருடன் ஆர்யா எதிர்கொண்டார்? அதிலிருந்து மீண்டு திரும்பி ஆர்யா வருவாரா? உண்மையில் செக்டர் 42 வில் என்னதான் நடக்கிறது? என்பதுதான் கேப்டன் படத்தின் மீதி கதை. இந்தப் படம் மொத்தம் ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் இவ்வளவு நேரம் குறைவாக இருந்த போதிலும் இதன் இரண்டாம் பாகம் சற்று ஜவ்வாக இழுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
எந்த ஒரு ஆர்வத்தையோ விறுவிறுப்புமே கொடுக்காமல் ஒரு சாதாரண படமாக ஏலியன் வகை படங்களை பார்க்க தயார் என்றால் இந்த படத்தை தாராளமாக சென்று பார்க்கலாம். TamilGlitz Rating: 2/5