தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை பார்வதி வீட்டில் பூட்டி வைத்து தாக்கியதாக, சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை பார்வதி நாயர் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷ், இளங்கோவன், செந்தில் முருகன், அஜித், ராஜேஷ் ஆகியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கடித்தாகவும், அதனை பார்த்ததால் தன்னை தாக்கியதாகவும் சுபாஷ் சந்திரபோஸ் தனது புகாரில் தெரிவித்து உள்ளார். பிரபல நடிகை இவ்வாறு நடந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.