“இந்த ஒரு புடவைக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்கா?”!! திருமண உடையில் பரிகாரம் செய்து திருமணம் செய்து கொண்ட நயன் விக்கி தம்பதியினர்!!

வெளியிட்டது

7 ஆண்டுகள் காதல் இப்பொது திருமணத்தில் முடிந்துள்ளது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் சினிமா பிரபலங்களும், உற்றார் உறவினர் முன்னிலையிலும் மிக பிரமாண்டமாக நடைபெற்றது இருவரின் திருமணம். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் திருமணமே நேற்றைய தினத்தின் பல்வேறு இடங்களில் முக்கிய செய்தி. அவர்களுடைய மெஹெந்தி பங்க்ஷன் முதல் நேற்றைய திருமணம் வரை அனைத்துமே சமூக வலைத்தளங்களில் ட்ரெட்னிங் தான்.

"இந்த ஒரு புடவைக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்கா?"!! திருமண உடையில் பரிகாரம் செய்து திருமணம் செய்து கொண்ட நயன் விக்கி தம்பதியினர்!! 1

மிகவும் கடவுள் நம்பிக்கை உடையவராக இருவரும் இருப்பதால் நீண்ட நாட்களாகவே பல்வேறு கோவிலைகளுக்கு சென்று வழிபட்டும், நேர்த்திக்கடன்களை பலவற்றை செய்தும், விக்னேஷின் குல தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வைத்து பூஜை செய்து பல்வேறு வகையிலான நேர்த்திக்கடன்களை செய்து வந்தனர்.

கிறிஸ்துவராக இருந்த நயன்தாரா சில ஆண்டுகள் முன் ஹிந்து மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இருவரும் திருப்பதியும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். அதன் மூலமே அங்கேயே திருமணம் நடத்த கேட்டு, அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நேற்று ஆடம்பரமாகவும், அழகாகவும் நடந்து முடிந்த திருமண நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை நயனதாரா தான். அதுவும் குறிப்பாக அவர் அணிந்திருந்த  உடை தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் இருவரின் விருப்பப்படி தனித்துவமாய் வடிவமைக்கப்பட்டன. நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். நவீன காலத்திற்கும் ஏற்றவாறு பாரம்பரிய மணம் சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது அப்புடவை. பார்டர்களில் ‌வரலாற்று சிறப்புமிக்க கொய்சாலா கோவிலின் கட்டிடங்கள் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த பாரம்பரிய சிறப்பு மிக்க கோயில்களின் சிற்பங்கள்தான் நயன்தாராவின் சிவப்பு நிற திருமண ஆடையில் எம்ராய்டரியாக போடப்பட்டிருக்கிறது. அவை பல மணி நேர வேலைப்பாடுகள் மற்றும் உன்னிப்பான கைவினைத்திறனால் உருவாக்கப்பட்டுள்ளன.

 

இந்த பாரம்பரிய சிறப்பு மிக்க கோயில்களின் சிற்பங்கள்தான் நயன்தாராவின் சிவப்பு நிற திருமண ஆடையில் எம்ராய்டரியாக போடப்பட்டிருக்கிறது. அவை பல மணி நேர வேலைப்பாடுகள் மற்றும் உன்னிப்பான கைவினைத்திறனால் உருவாக்கப்பட்டுள்ளன.

திருமண ஆடை குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியபோதே நயன்தாரா பாரம்பரிய சுவையுடன் கூடிய நவீன மயமான உடை அணியவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தாராம். பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, ஜேட் குழுமத்தின் டிசைனர் மோனிஷா ஷாவிடம் பழங்கால கோயில்களின் கட்டிடக்கலை சாராம்சங்களைத் தழுவி திருமண ஆடை வடிவமைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். நயன்தாராவின் விருப்பத்திற்கேற்ப சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற கொய்சாலா கோயில்களைப் பற்றி கூறினார் மோனிகா. இந்த பாரம்பரிய சிறப்பு மிக்க கோயில்களின் சிற்பங்கள்தான் நயன்தாராவின் சிவப்பு நிற திருமண உடையில் எம்ராய்டரியாக போடப்பட்டிருக்கிறது. அவை பல மணி நேர வேலைப்பாடுகள் மற்றும் உன்னிப்பான கைவினைத்திறனால் உருவாக்கப்பட்டுள்ளன.

நயன்தாரா லெஹங்காமீது புடவை அணிவது போன்ற ஆடை வகைகளில் பிரியமாக இருப்பவர். மோனிகா புடவையின் பல்லுவில் அலை அலையாய் இருப்பதுபோல் வடிவமைத்துள்ளார். மிக நீளமான பல்லு, சிவப்பு நிற நெட் துணியில் ஆன வெய்யில் (மகளிர் திருமணத்தின் போது அணியும் முக்காடு) ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்த ஆடை உடுத்துவதற்கு ஏற்ப மிகவும் குறைவான எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்து புராணங்களின்படி லக்ஷ்மி தெய்வம் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் குறிக்கிறது. எனவே மணமக்களின் உடைகளில் கைகளைச் சுற்றி லட்சுமியின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒற்றுமை,அர்ப்பணிப்பு மற்றும் பரஸ்பர மரியாதையை குறிக்கும் வகையில் மணமக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

மணமகன் விக்னேஷ் சிவன் வேஷ்டி குர்த்தி மற்றும் சால்வை ஒன்றை அணிந்திருந்தார். இவரின் ஆடையும் ஜேட் குழுமத்தால் வடிவமைக்கப்பட்டவைதான்.எம்ப்ராய்டரி டிசைனால் அலங்கரிக்கப்பட்ட சால்வை இவரது ஆடைக்கு மேலும் அழகை கூட்டியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்