எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவானந்தம் வீட்டிற்குள் புகுந்த ரவுடிகள் அவரையும் அவரது மனைவியும் கடுமையாக தாக்குகின்றனர். அப்போது உள்ளே வரும் ஜனனி ஜீவானந்தத்துடன் இணைந்து ரவுடிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் குணசேகரனின் அப்பத்தா ஜீவானந்தத்தை பார்க்காமல் நான் கையெழுத்து போட மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குணசேகரன் தனது தம்பி கதிர் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரி வளவன் ஆகியோரை ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக அனுப்பி வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஜனனியும் ஜீவானந்தத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். ஜனனி தற்போது ஜீவானந்தம் இருக்கும் வீட்டை கண்டுபிடித்து இருக்கிறார். அதேசமயம் ஜீவானந்தம் வீட்டிற்குள் புகுந்த கதிர் மற்றும் வளவன் ஆட்கள் அவரைத் தாக்க தொடங்குகின்றனர். அப்போது உள்ளே வரும் ஜனனியும் அவர் ஜீவானந்தத்துடன் இணைந்து ரவுடிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் ஜீவானந்தத்தின் மகள் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னர் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. ஜீவானந்தத்தின் மகள் அப்பா என்று கதறி அழுகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது.
ஜீவானந்தத்தை ஒருவேளை ரவுடிகள் சுட்டு விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv