எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களையும் குணசேகரன் அடித்து விரட்டுகிறார். அனைவரும் கிழவியை தேடி கண்டுபிடித்து அவரிடம் இருந்து சொத்துக்களை மீட்டு வருமாறு குணசேகரன் பெண்களை விரட்டி அடிக்கிறார் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஜீவானந்தத்திற்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்து உள்ளனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக ஜீவானந்தம் அப்பத்தாவின் ஆள் தான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்கின்றனர். இதனால் அப்பத்தாவுக்கும், ஜீவானந்தத்திற்கும் ஆதரவு கொடுக்க வீட்டில் உள்ள மருமகள்கள் அனைவரும் முடிவெடுக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவானந்தத்துடன் அப்பத்தா காரில் கிளம்பி சென்று விடுகிறார். அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் நந்தினி, ரேணுகா உட்பட அனைவரையும் மிரட்டுகிறார். போய் கிழவியை கண்டுபிடித்து சொத்தை மீட்டு வருமாறு அவர்களை திட்டி வெளியே அனுப்பி விடுகிறார் வெளியே வந்த அனைவரும் கோவில் ஒன்றில் வைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி நான் சம்பந்தப்பட்ட ஜீவானந்தத்திற்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நினைத்துப் பார்க்கும் போது தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

இத்தனை நாள் அப்பத்தாவும் ஜனனியும் மட்டுமே ஜீவானந்தத்திற்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில், தற்போது ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி என அனைவரும் ஜீவானந்தத்திற்கு ஆதரவாளர்களாக மாறி ஆதி குணசேகரனை பாடாய் படுத்த போகிறார்கள் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV