நீண்ட நாட்களுக்கு பிறகு இசைவாணி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். புத்தாண்டில் அவர் புது கார் வாங்கியுள்ளார். அந்த காருடன் நின்று அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். ஜீன்ஸ் பேண்ட், ஹேர் கட்டிங் என ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. வடசென்னையை சேர்ந்த இவர் தனது தந்தை வழியை பயன்படுத்தி இவரும் கானா பாடல் பாடிவந்த இவர், ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசை வாணியை தேர்வு செய்து பெருமைப்படுத்தியது பிபிசி நிறுவனம். பின்னர் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த இசைவாணி, “நான் திருமணமானதை மறைத்து விட்டேன் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், நான் மறைக்கவில்லை அதை நான் தனிப்பட்ட பிரச்சினையாக கொண்டு வரவும் இல்லை. ஆனாலும், அதை பற்றி நிறைய பேர் கேலி செய்தார்கள். ஆனால், இதற்கு நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த விஷயம் தேவையில்லை என்று நினைப்பதால் அதைப்பற்றி நான் பேசவில்லை என்று கூறி இருந்தார்.
தற்போது இசைவாணி பல படங்களில் பாடும் வாய்ப்பு பெற்றுள்ளார். குறிப்பாக மேடை கச்சேரிகளில் பிசியாக இருக்கிறார். இதனால் அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வளவு ஆக்ட்டிவாக இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இசைவாணி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். புத்தாண்டில் அவர் புது கார் வாங்கியுள்ளார். அந்த காருடன் நின்று அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். ஜீன்ஸ் பேண்ட், ஹேர் கட்டிங் என ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.