இப்போதைய நடிகர்களில் மிகவும் சந்தோசமாக இருக்கும் நடிகர் கமலஹாசன் தான். 4 ஆண்டுகள் இவர் நடிக்கவில்லை இது மிக பெரிய கம்பேக் என ரசிகர்கள் பொதுவாக கூறினாலும், உண்மையில் தசாவதாரம் படத்திற்கு பிறகு நடிகர் கமல் பெரிய வெற்றியை பெறவில்லை. விஸ்வரூபம் நல்ல வெற்றியை பெற்றபோதிலும் அது ஒரு கமர்சியல் படமாக இல்லாமல் வேறு ஒரு பாணியில் கமல் படமாக்கி வெற்றி கண்டார்.

அந்த போட்டியில் ரஜினி அடுத்தடுத்து பல கமர்சியல் படங்களை அடுத்தடுத்து கொடுத்து மிகவும் முன்னே சென்றார். இன்றைய தலைமுறையும் ஒரு மிக பெரிய கமர்சியல் நாயகனாக இருந்த கமலை கொண்டாட தவறியது. அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்து தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவே கொண்டாடும் படமாக இப்பொது “விக்ரம்” படம் உருவெடுத்துள்ளது. படம் வெளியான இரண்டே வாரங்களில் 300 கோடி வசூலை ஈட்டி இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பல வெற்றி கொண்டாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் கமல்ஹாசன், சமீபத்தில் தன்னுடைய மக்கள் நீதி மையம் காட்சி சார்பில் ஒரு ரத்ததான முகாம் நடத்தியுள்ளார். இதில் அவருடைய ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்துள்ளனர். கமலும் இந்த விழாவில் கலந்துக்கொண்டு ரத்ததானம் செய்தார். இந்த முகாமில் 4 லட்சம் லிட்டர் ரத்த தானம் செய்யப்பட்டுள்ளது.

பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல், பல விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக முன்னர் “விக்ரம், விக்ரம்” என கத்திக்கொண்டிருந்த ஒரு ரசிகரை அதட்டி வாயை மூட சொன்ன கமல். இது குறித்து பேசுகையில், விக்ரம் படம் வேறு, இது வேறு, இந்த ரத்ததான முகாமில் வந்து விக்ரம் விக்ரம் என கத்தினால், மற்றவர்களை போல நாமும் ரத்தத்தை விற்கிறோம்” என யாராவது தவறாக அர்த்தம் செய்து கொள்ள கூடும். அதனால் தான் நான் அவரை கத்தாதே என கொஞ்சம் அதட்டினேன்” என பதிலளித்துள்ளார்.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி நடிகர் கமலிற்கு மிக பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். சில காலமாக துவண்டு போய் காணப்பட்ட அவர் இப்பொது மீண்டும் சுறுசுறுப்பாக போது சேவைகளிலும், படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். விக்ரம் படத்தின் அடுத்த பாகம் ஆரம்பிக்கப்படும் அதற்கும் இவர் தான் இயக்குனர் என லோகேஷை காட்டி ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார்.

அண்மையில் நின்று போன இந்தியன் 2 படம் துவங்கப்படும் என தயாரிப்பாளர் உதயநிதி அறிவித்திருந்தார். அதே போல கமல் அடுத்ததாக மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகேஷ் நாராயணன் அண்மையில் வெளியான “மாலிக்” என்ற ஃபகத் ஃபாசில் படத்தின் இயக்குநராவார். அடுத்து பா.ரஞ்சித் ஏற்கனவே கமலுடன் இணைய போகுற செய்தி வெளியாகியது.
Video Courtesy – CineUlagam