விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடரில் கஸ்தூரி மற்றும் செல்வி ஆகிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல நடிகையாக இருக்கும் கம்பம் மீனா சமூக வலைத்தளங்களில் சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் இன்று தனது பேரனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். முருகன் அருளால் குழந்தை பிறந்ததால் முருகன் பெயர் சூட்டி இருப்பதாக அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் மீனா. ஆரம்பத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் பின்னர் படங்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தார்.

முதல் சீரியலேஇவருக்கு பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் நாடகத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால் பின்னர் வெள்ளி திரையிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் கம்பம் மீனா.

குறிப்பாக வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், களவாணி, முண்டாசுப்பட்டி, சகுனி, சிலம்பாட்டம், பூவா தலையா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

தெற்கத்தி பொண்ணு சீரியலில் தனக்கு வாய்ப்பளித்த பாரதிராஜாவுக்கு மருமகளாக இரட்டை சுழி திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயின் பாக்யாவின் வீட்டு வேலைக்காரியாகவும் நெருங்கிய தோழியாகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் கஸ்தூரி அத்தாச்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

துணை கதாபாத்திரம் என்றாலும் மீனாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. எதார்த்தமான தேனி பாஷையாலும், சிறந்த நடிப்பாலும் பல உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் மீனா.

மீனாவிற்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கும் நிலையில் மகனுக்கு கடந்த வருடம் திருமணம் ஆகி சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அது குறித்து பதிவிட்டுள்ள மீனா, “சூரிய பிரகாஷ் – சிவரஞ்சனி திருமண நாளோடு எனது பேரனுக்கு பெயர் சூட்டு விழாவும் இனிதே நடந்தது.

குழந்தைக்கு ‘தீக்ஷிதன்’ என்று அந்த முருகப்பெருமானின் பெயர் சூட்டி மகிழ்ந்தோம் என்று அழகிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் குழந்தைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.