கயல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் எழிலின் தாயார் சிவசங்கரியிடம் எழிலுக்கும் ஆர்த்திக்கும் நாளை திருமணம் நடைபெறட்டும் பிறகு உன்னை கவனித்துக் கொள்கிறேன் என்று கோபத்துடன் கூறிவிட்டு சொல்கிறார். ஆர்த்தி கழுத்தில் எழில் தாலி கட்டிய அடுத்த நிமிடம் உன் கதி என்ன ஆகும் என்று பார் என்று கூறிவிட்டு கயல் கோபத்துடன் செல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தற்போது சின்னத்திரை உலகில் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் கயலுக்கும் எழிலுக்கும் திருமணமும் நடைபெறுமா என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவசங்கரி தான்தான் சூர்யாவை விட்டு கயலின் நற்பெயரை கெடுப்பதற்காக திட்டங்களை தீட்டினேன், இந்த விஷயம் மட்டும் எழிலுக்கு தெரிந்தால், என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதை ஒட்டு கேட்ட கயல் தற்போது நேராக வந்து சிவசங்கரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். நீ இதை செய்திருப்பாய் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி அவரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். மேலும் எழில் ஆர்த்தியை திருமணம் செய்த அடுத்த நிமிடம் உனக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.

நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV