சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஆனந்தி என்ன நடந்தது என்கிற உண்மையை தனது தாயாரிடம் சொல்ல போகிறார். அப்போது சரியாக கயல் வந்து அதை தடுத்து நிறுத்துகிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கயிலின் தங்கை ஆனந்தியிடம் தவறாக நடக்க வந்த பிரபு, கால் வழுக்கி ஜன்னல் கம்பியில் தலை இடித்து இறந்து விடுகிறார். இந்த செய்தியை கயல் மற்றும் அவரது தங்கை குடும்பத்திடமிருந்து மறைத்து அவரை புதைத்து வைத்திருக்கின்றனர். இதை தற்போது போலீசார் நெருங்கி இருக்கின்றனர். ஒரு வேளை ஆனந்தி பிடிபட்டால் தான் அந்த கொலைகளை செய்தேன் என்று சொல்லி தான் சரணடைய போவதாக கயல் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாக இருக்கிறது.

அதில் கயலின் அம்மா ஆனந்தியை தனியாக அழைத்து என்னிடம் மட்டும் உண்மையை சொல்லிவிடு நான் யாரிடமும் சொல்ல போவதில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனந்தியும் உண்மைகளை சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது சரியாக கயல் உள்ளே வந்து ஆனந்தியை தடுத்து நிறுத்துகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV