Categories: சினிமா

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன குஷ்பூவின் மகள்.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் குஷ்புவின் மகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஷ்பூவை போலவே அப்படியே உருவ தோற்றம் கொண்டு அவந்திகாவின் தற்போது படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன குஷ்பூவின் மகள்.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.! 1

மும்பையைச் சேர்ந்தவர் நடிகை குஷ்பூ. நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார் நடிகை குஷ்பூ. இது மட்டுமல்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக கலர்ஸ் தமிழில் மீரா என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது மட்டுமல்லாமல் கோடீஸ்வரி, ஜாக்பாட், மானாட மயிலாட போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்திருக்கிறார். நடிப்பது மட்டுமில்லாமல் தனது கணவருடன் இணைந்து அவனி சினி மேக்ஸ் என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி பல படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.

மேலும் படங்களை இயக்குவது, நாடகங்கள் இயக்குவது, நாடகத்திற்கு வசனம் எழுதுவது என்று பன்முக திறமையாளராக வலம் வரும் குஷ்பூ, அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்த அவருக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் பதவி சமீபத்தில் வழங்கப்பட்டிருந்தது. கடைசியாக குஷ்பூ விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை.

குஷ்புவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கும் இயக்குனர் சுந்தர் சிக்கும் 2000 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அவந்திகா அனந்திகா என்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.


இதில் அவந்திகா லண்டனில் நடிப்பு பள்ளியில் பயின்று வருகிறார். விரைவில் அவர் தமிழ் திரையுலகில் நடிகையாக வலம் வரப்போவதாக சமீபத்தில் குஷ்புவே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். குஷ்புவின் மகள்கள் இருவரும் உடல் எடை கூடி காணப்பட்டதால் நெட்டிசன்கள் பலராலும் உருவக் கேலி செய்யப்பட்டனர்.

பின்னர் குஷ்பூ மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோர் கடுமையாக உழைத்து உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தனர். உடல் எடை குறைந்தது தற்போது அவந்திகா ஹீரோயின் போல மாறியிருக்கிறார். அவர் தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அதை பார்த்த பலரும் குஷ்புவின் மகளா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டாரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்