கடைசி 2 இடத்தில் நிற்கும் கிஷோர் மற்றும் ஷெரின்.! வெளிய போனது யாருனு தெரியுமா? முதல் எலிமினேஷன்.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி சீசனில் முதல் எலிமினேஷன் நடந்துள்ளது. முக்கியமான போட்டியாளர் ஒருவரை வெளியேற்றியுள்ளது குக் வித் கோமாளி டீம். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை உலகம் எங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கியமான ரியாலிட்டி ஷோக்கள்தான் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி. பிக்பாஸ் முடிந்த கையோடு விஜய் டிவி ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். அந்த வகையில் தற்போது சீசன் 4 வெகு விமர்சையாக தொடங்கி இருக்கிறது. பழைய கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, குரேஷி, மணிமேகலை ஆகியோர் இருக்க ஜிபி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் ஹீரோயின் ரவீனா, ஓட்டேரி சிவா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற பலரை புதிய கோமாளிகளாக அறிமுகப்படுத்தி இருக்கிறது விஜய் டிவி. வழக்கம் போல் ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக தொடர்கிறார்கள்.

கடைசி 2 இடத்தில் நிற்கும் கிஷோர் மற்றும் ஷெரின்.! வெளிய போனது யாருனு தெரியுமா? முதல் எலிமினேஷன்.! 1

மேலும் கோமாளிகளில் முக்கிய பங்கு வகித்த சிவாங்கி இந்த முறை குக்காக களம் இறங்கி இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலக்கப்போவது யாரு பாலா இந்த முறை இடம்பெறவில்லை. இது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய குக்குகளை அறிமுகம் செய்திருக்கிறது. அதில் மேகா படத்தில் ஹீரோயினாக நடித்த சிருஷ்டி, வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ஷெரின் சிரிங்கர், ரஜினியுடன் முத்து படத்தில் நடித்திருந்த விசித்ரா, நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர், பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே விஷால், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் 10-வதாக மைம் கோபி குக்காக கலந்து கொண்டுள்ளார்.

 

 

இந்த நிலையில் இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டு என்பதால் ஒரு குக்கை வெளியே அனுப்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் நடுவர்கள் இருக்கிறார்கள். அதன்படி ஷெரின், காளையன், இயக்குனர் கிஷோர் ஆகிய மூவர் கடைசி 3 இடத்தில் இருக்கிறார்கள். இதில் காளையன் கொஞ்சம் நன்றாக சமைக்க கூடியவர், புகழ் மற்றும் காளையன் இருவர் சேர்ந்து செய்யும் காமெடிகளும் பிரபலம். ஷெரினுக்கு வெளியில் மக்களின் ஆதரவு இருக்கிறது. எனவே குறைந்த வாக்குகள் வாங்கி கிஷோரை வெளியே அனுப்பி இருக்கின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மனோபாலாவுக்கு பிறகு ஒரு இயக்குனரை களம் இறக்கி இருந்தார்கள். அவர் கடந்த ஆண்டு வெளியான நாய் சேகர் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் சீசன் 4ல் முதல் ஆளாக எலிமினேட் ஆகி வெளியே சென்று இருக்கிறார் கிஷோர். இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்