தெலுங்கில் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் தான் பக்கம் ஈர்த்தவர் நடிகை கிரித்தி ஷெட்டி. நாம் ஊர் விஜய் சேதுபதி அறிமுகமான “உப்பேனா” படம் மூலம் அறிமுகமாவர் இந்த நடிகை. இரண்டாவது படுத்திலேயே நடிகர் நானி நடிப்பில் வெளியான “ஷியாம் சிங்கா ராய்” படத்தில் நானியுடன் நடித்து இருந்தார்.
இப்பொது இவர் நடிப்பில் ராம் பொத்தின்னியுடன் “வாரியர்” மற்றும் தமிழில் சூர்யாவுடன் பாலா இணையும் படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். மிகவும் இளம் வயதில், கிட்டத்தட்ட தென்னிந்திய ரசிகர்கள் பாலருக்கும் பிடித்தமான நடிகையாக இவர் மாறியுள்ளார்.

திரை பிரபலங்களுக்கு ஃபிராங்க் நிகழ்வுகள் சகஜம் தான் அவரக்ளும் நம்பலை போன்று சில சமயங்களில் உணர்ச்சி வசப்படுவது சகஜம் தான். வாடா போச்சே நிகழ்ச்சிக்கு விருந்தினராக கிருத்தி ஷெட்டி அழைக்கப்பட்டார். நேர்காணலில் யார் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று அறிவிப்பாளர் சத்தமாக வாதிடத் தொடங்கினார், இது உண்மையில் விளையாட்டு என்றாலும் நடிகைக்கு அது விளங்காமல் ஒரு கட்டத்தில் திடீரென அழ தொடங்கினார்.
சிறுது நேரம் செய்வது அறியாமல் பேட்டியாளர்கள் தவிக்க, கொஞ்சம் நேரம் கழித்து சுதாரித்து கொண்ட நடிகை பின் அழுவதை நிறுத்தி மீண்டும் பேட்டியளிக்க தொடங்கினர். கொஞ்ச நேரமே நீடித்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை மிகவும் பதட்டமடைய செய்தது.
பலரும் இது போன்ற ஃபிராங்குகளை வேண்டாம் என கூறிவந்தாலும், இதனை செய்பவர்கள் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு அது சகஜமான விஷயமாக இருந்தாலும் இந்த விஷயதாகி எதிர்கொள்பவர்களுக்கே அந்த கொஞ்ச நேரம் பதபதைப்பு புரியும்
Video Courtesy – GalattaTamil