
நடிகை குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக நிறைய ஹிந்தி படங்களில் தோன்றியுள்ளார். பின்னர் மெதுவாக தெலுங்கில் சண்டிகர் வெங்கடேஷ் நடித்த “கலியுக பண்டாவுளு” என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில் ரஜினி, பிரபு நடிப்பில் உருவான “தர்மத்தின் தலைவன்” படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பிரபுவுடன் இவர் நடித்த “சின்னத்தம்பி” படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி, ராமராஜன், சத்யராஜ், சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் நடித்து முதன்மை நாயகி ஆனார்.

இவர் ஜெயராம் நடித்த “முறை மாமன்” என்ற படத்தில் சுந்தர்.சி யுடன் பணியாற்றினார். இதன் மூலம் இருவருக்கும் காதல் மலர, 2000அம் ஆண்டு திருமணம் முடித்தார். தமிழ் திரையுலகில் ஒரு நாயகிக்கு முதல் முறை கோவில் கட்டி கும்பிட்டது இவருக்கே ஆகும்.
அந்த அளவிற்கு இவரின் புகழ் அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்தார். திருமணம் ஆனா இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முத்த மகள் விரைவில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். சில ஆண்டுகளாக கொஞ்ச உடல் எடை கூடிய இவர், இப்பொது திடீரென மிகவும் உடற்பயிற்சி செய்து உடலை குறைத்து உள்ளார்.

அண்மைகாலமாகவே நடிகை குஷ்பூ மிகவும் இளமையாக உடலெடையை குறைத்து காணப்படுகிறார். இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரலானது. குறிப்பாக பலரும் அவரின் இந்த மிக பெரிய மாறுதலுக்கு நிறையவே பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் சில நேரங்களில் சிலர் இவர் சீப்பான plastic surgery treatment மூலம் இவ்வாறாக உருமாறியுள்ளார் என தங்களது கருத்துக்களை கூறியவண்ணம் இருக்கிறார்கள். அதிலும் சிலர் இவரின் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வாறே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர்.
அந்த வகையில், சமீபத்தில் மாடர்ன் உடை ஒன்றில் அவர் போட்டோசுட நடத்தி அதானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார. இதைப்பார்த்த சமூகவலைதளவாசி ஒருவர், “அழகாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் plastic surgery மற்றும் தோல் adjustment செய்ய வேண்டும்? உங்களுடைய எதார்த்தமான தோற்றத்துடனே நீங்கள் வயதாகலாமே” என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் சொன்ன குஷ்பு, “நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்? மத்தவங்கள துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுனு தெரியல. உன்னை நினைச்சா அவமானமா இருக்கு” என தரமான பதில் கொடுத்துள்ளார்.