விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்றுதான் மௌன ராகம். இதில் கதாநாயகன் கார்த்திக்கு இரண்டு மனைவிகள். அதில் மூத்த மனைவிதான் மல்லிகா. இரண்டாவது மனைவி காதம்பரி. இதில் மூத்த மனைவி இறந்து விட்டதாக நினைத்து அவர் காதம்பரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வார். ஆனால் மூத்த மனைவி ஒரு கிராமத்தில் தனது மகள் சக்தியுடன் வசித்து வருவார். ஒரு கட்டத்தில் கிராமத்தில் இருந்து சக்தி தனது தந்தையை தேடி சென்னைக்கு வர பின்னர் அந்த குழந்தை கார்த்திக் வீட்டிலேயே தஞ்சம் அடைகிறது. அந்த குழந்தை தன்னுடைய குழந்தை தான் என்பதை தெரிந்துகொள்ளும் கார்த்திக், அதற்கு பரிவு காட்டி வளர்த்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் மல்லிகாவும் உயிருடன் இருக்கும் விஷயம் கார்த்திக்கு தெரிய வருகிறது. பின்னர் மல்லிகாவுக்கும் காதம்பரிக்கும் சண்டை தொடங்குகிறது. மல்லிகா குடும்பத்தை எப்படியாவது பழி வாங்கி அவர்களை கார்த்திக்கிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று காதம்பரியும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து திட்டம் தீட்டி வருகின்றனர். அத்துடன் சீசன் 1 முடிந்தது. இந்த நிலையில் தற்போது மௌன ராகம் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது இந்த கதையில் சக்தி வளர்ந்து வருண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வருணின் தம்பி தருணை காதம்பரியின் மகள் ஸ்ருதி திருமணம் செய்து கொண்டார். இதனால் கதை இன்னும் சுவாரசியமாகி கொண்டே வந்தது.

இந்த நிலையில் ஸ்ருதி இன்று வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைக்கிறேன் என்று சொல்கிறார். அதை சாப்பிட்டு விட்டு ஸ்ருதியின் மாமியார் உன் சமையல் நன்றாகவே இல்லை இனிமேல் நீ சமையலறை பக்கமே போக கூடாது என்று திட்டுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண. ! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Vijay Television