சென்னையில் எழும்பூரில் சாலை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்காக நயன்தாரா புத்தாண்டு பரிசுகளை வழங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பே அவர் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன்னர் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளனாகவும் வேலை பார்த்து வந்தார். இவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நடிகர் வினய், அனுபம் கேர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஸ்வின் சரவணன் இந்த படத்தை. திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே மாயா படத்தில் திரில்லர் ஜானரில் நயன்தாரா நடித்திருந்தார்.

விக்னேஷ் சிவனுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நயன்தாரா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சென்னையில் எழும்பூரில் சாலை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்காக நயன்தாரா புத்தாண்டு பரிசுகளை வழங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்.! Watch the below Video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O