பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், பிரசாந்த் மீது முதல் முறையாக மீனா சந்தேகப்படுகிறார். விரைவில் அவர் பிரசாந்தின் உண்மை முகத்தை புரிந்து கொண்டு ஜீவாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனார்த்தனன் கண் விழித்தவுடன் உண்மைகள் தெரிய வந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. தற்போது ஜனார்த்தனனை அவரது இரண்டாவது மருமகன் பிரசாந்த் கத்தியால் குத்தி விடுகிறார். பின்னர் மூத்த மருமகன் ஜீவா தான் கத்தியால் குத்தி விட்டார் என்று நாடகமாடுகிறார். உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் ஐனார்த்தனனை ஆக்ஸிஜனை கழட்டி கொலை செய்ய பிரசாந்த் அறைக்கு வருகிறார். அதை பார்த்த மீனா இங்கு என்ன செய்கிறாய் என்று பிரசாந்தைப் பார்த்து கேட்கிறார்.

அதற்கு மாமாவை பார்த வந்தேன் என்று பிரசாந்த் கூறுகிறார். பின்னர் பிரசாந்தின் மனைவி டிஸ்சார்ஜ் ஆன பிறகும் எதற்காக பிரசாந்த் மருத்துவமனையிலேயே இருக்கிறார் என்பதை எனக்கு தெரியவில்லை எனக் கூற, மீனா மருத்துவமனைக்கு விரைந்து செல்கிறார். இதனால் பிரசாந்த் மீது மீனா சந்தேகப்படுகிறார். உண்மைகள் தெரிய வந்த பின்னர் பிரசாந்த் கைது செய்யப்பட்டு ஜனார்த்தனன் கண் விழித்தப் பின்னர் நாடகம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television