
ஒரு காலத்தில் சன் டிவியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் நிறைவடைந்து பல வருடங்கள் ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரையிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் சீரியல்களும் சின்னத்திரையில் இருந்து வருகிறது.
தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் சின்னத்திரை நடிகை ரட்சிதா. பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் டிவி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார். பின்னர் பல தொடர்களில் நடித்த போதும் இவரால் பெரிய அளவில் பிரபலம் ஆக முடியவில்லை. பின்பு சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். இன்றளவும் அந்த தொடர் பேசப்படுவதற்கு ரட்சிதாவின் நடிப்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிப்பில் அசத்தியிருப்பார். சமீபத்தில் கூட நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த தொடரிலிருந்து விலகினார்.
கடந்த ஒரு ஆண்டாகவே இருவரும் பேசாமல் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. ரட்சிதா, தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 2013ல் இவர்களது திருமணம் நடைபெற்றது. 9 ஆண்டு காலம் கணவன் மனைவியாக வாழ்ந்த இவர்கள் தற்போது திருமண உறவை முறித்துள்ளனர். ரட்சிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் தினேஷுக்கு வாய்ப்புகள் வராத காரணத்தால் மனஸ்தாபம் என்று கூறப்படுகிறது. திருமணம் ஆகி 9 ஆண்டுகளாக குழந்தை இல்லாததும் பிரிவுக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற சீரியல்தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் இடம் பெற்றிருந்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீசன் 3ன் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.
இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து அனைத்து சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வந்தது. அதோடு சில நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும் பணியாற்றி வந்தார். இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்திருந்தார்.
இந்த சீரியலிற்க்கும் முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியல் தனது முன்னாள் கணவர் தினேஷுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. பின்னர் திடீரென என்ன காரணம் என வெளிவரமாலேயே இந்த தொடர் நிறுத்தப்பட்டது. அதன் பின் கணவன் மனைவி இருவரும் அதே தொலைக்காட்சியில் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
அதன் பின் தான் இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் கலர்ஸ் தமிழின் ‘இது சொல்லமறந்தகதை’ சீரியலில் நடித்து வருகிறார். கணவனை இழந்து இரண்டு குழந்தைகளை கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை கஷ்டங்களை இந்த தொடர் கூறுகிறது. இதில் நாயகனாக விஷ்ணு நடித்து வருகிறார். வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கும் இந்த தொடரின் நடுவில் தனியார் பேட்டியில் இவர் பேசிய போது, “இந்த சீரியலின் கதையும் தனது வாழ்க்கையின் கதையும் ஒரே மாதிரி இருக்கு” கூறியிருந்தார்.
இது செய்தி மிக வேகமாக பரவியது. அன்று முதல் இவருக்கு கணவர் தினேஷிற்கும் எதோ பிரச்சனை இருவரும் பிரிந்து விட்டனர் என பலரும் பேசி வந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைக்கும் படி இவரே தாங்கள் பிரிந்து விட்டதாக கூறியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு சமீபத்தில் விவாகரத்தை பெற்று விட்டதாக செய்திகளும் வெளிவந்த வண்ணம் இருந்தன.
அது மட்டுமின்றி இவர் கடந்த சில மாதங்களாக தனியார் நிகழ்ச்சி இயக்குனர் ஒருவருடன் காதலில் உள்ளதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள் எனவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இது குறித்து இப்போது வரை ரக்ஷிதா ஏதும் கூறவில்லை என்றாலும், அவர் அந்த செய்திக்கு இது வரை மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. இது பற்றி இவரிடம் கேள்வி கேட்ட போது எதுவும் கூறாமல் சென்று விட்டார். இதனால் விரைவில் அது குறித்து இவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தெரிகிறது.