Watch the video below நடிகை ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா. தெலுங்கில் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே வெற்றிப்பட்டது. இதனால் புகழின் உச்சத்திற்கு சென்றார். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் சுல்தான்.

கார்த்தி நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து தமிழ் திரைப்பட ரசிகர்களின் மனதை கொள்ளயடித்து சென்றார் ராஷ்மிகா. சமீபத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு இந்த படம் திரையில் வெளியானது. ஆனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து மேலும் இவர் தமிழ் படங்களில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ராஷ்மிகாவின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தன்னிடம் செல்ப்பி கேட்ட போலீஸ் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.