Categories: சினிமா

கணவருடன் இணைந்து புது தொழிலை தொடங்கிய சினேகா..! பிரம்மாண்ட கடைத் திறப்பு விழா..!

வெளியிட்டது

நடிகை சினேகா தற்போது தனது கணவருடன் இணைந்து புது தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா.

கணவருடன் இணைந்து புது தொழிலை தொடங்கிய சினேகா..! பிரம்மாண்ட கடைத் திறப்பு விழா..! 1

இவர் மலையாள படம் ஒன்றில் அறிமுகமாகி பின்னர் தமிழ் திரை உலகத்திற்கு வந்தார். மும்பையில் தெலுங்கு குடும்பம் ஒன்றில் பிறந்த இவர் பின்னர் துபாயில் வளர்ந்தார். அதன் பின்னர் 2000ம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், தற்போது தளபதி விஜயின் 68வது படமான ‘கோட்’ படத்திலும் நடித்து வருகிறார். 2009ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவுடன் காதலில் விழுந்தார் சினேகா. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்கிற படத்தில் இருவரும் நடித்துக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது.

காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் மற்றும் ஆதித்ந்யா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சினேகா அப்போது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் இன்று ‘சினேகாலயா’ என்கிற புது தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

சமீப காலமாக அவர் புடவை தொழிலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மிகப்பெரிய ஜவுளி கடையை திறந்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

YouTube Video Embed Code Credits: Snehalayaa Silks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்