பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி வெளியீடு!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி வெளியீடு!! 1

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்வோர் வசதி கருத்தில் கொண்டு வரும் ஜனவரி மாதம் நான்கு நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறினார்.ஜனவரி 11,12,13,14 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்புப்ப் பேருந்துகள் இயங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகளும் பிற இடங்களிலிருந்து 10,445 பேருந்துகளும் இயக்கப்படும். மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்புப் பேருந்துகள் மாதவரம், தாம்பரம் மெப்ஸ், கே.கே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சிறப்புப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய ஜனவரி 9ஆம் தேதி முதல் சிறப்புப் மையங்கள் மூலம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  காஷ்மீரில் ஆகஸ்டு 5 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் ரெயில் சேவை தொடக்கம்! மக்கள் மகிழ்ச்சி!

தமிழக போக்குவரத்துறையின் இணையதளத்தில் (www.tnstc.in) மட்டுமின்றி, ரெட்பஸ் (www.redbus.in), பேடிஎம் (www.paytm.com) மூலமும் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 11 முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 11 முதல் 14 வரை நாள்தோறும் இயக்கப்படும் 2275 பேருந்துகளுடன் 5163 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பண்டிகை முடிந்து திரும்பி வருவோருக்கான சிறப்புப்ப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

விளம்பரம்

Leave a Comment