ஸ்ரீநிதி தற்கொலைக்கு முயன்றானு செய்தி படிக்கும் போது பெத்த வயிறு பத்தி எரியுது..தப்பா செய்தி போடாதீங்க..கதறி அழும் ஸ்ரீநிதி தாய்

வெளியிட்டது

ஸ்ரீநிதி மனநல மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றதாக வரும் செய்தியில் உண்மையில்லை, அவ்வாறு செய்தி வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீநிதியின் தாயார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வலிமை படம் குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி. வலிமை படம் குறித்து கருத்து தெரிவித்ததால் அஜீத் ரசிகர்கள் இவரை வறுத்து எடுத்துவிட்டனர். உண்மையான அஜீத் ரசிகர்களாக இருந்தால் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கண்ணீருடம் பதிவிட்டு இருந்தார் ஸ்ரீநிதி. பிறகு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடி வருகிறார் என்று ஸ்ரீநிதியை கழுவி ஊற்றி வந்தனர் நெட்டிசன்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநிதி தற்கொலைக்கு முயன்றானு செய்தி படிக்கும் போது பெத்த வயிறு பத்தி எரியுது..தப்பா செய்தி போடாதீங்க..கதறி அழும் ஸ்ரீநிதி தாய் 1

விஜய் தொலைக்காட்சியில் வெளியான 7C என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்கள் தான் கேபி, ஸ்ரீநிதி, ஸ்ரீத்து நாயர் போன்றவர்கள். தற்போது இவர்கள் அனைவரும் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கி வருகின்றனர். இதில் ஸ்ரீநிதி, யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். வலிமை சர்ச்சை ஓய்ந்த பிறகு சிம்பு குறித்து ஒரு பதிவிட்டார் ஸ்ரீநிதி. சிம்புவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி சிம்பு வீட்டின் முன்பு தர்ணாவிலும் ஈடுபட்டார். பின்னர் அவர் நெருங்கிய தோழி நட்சத்திரா தவறான நண்பருடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார், நட்சத்திராவை அடைத்து வைத்துக் கொடுமை படுத்துகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார் ஆனால் நட்சத்திரா இதையெல்லாம் மறுத்து இருந்தார்.

 

மேலும் வீட்டின் சுவர் முழுவதிலும் கிறுக்கி வைத்து இருந்தார். தன்னை அம்மா ரூமில் அடைத்து வைத்து கொடுமை செய்வதாகவும் ஒரு பேட்டியில் கண்ணீர் மல்க கூறினார் ஸ்ரீநிதி. அவரின் இந்த மன அழுத்ததிற்கு முக்கிய காரணம் அவரின் நண்பர்களே அவரை பைத்தியம் எனக் கூறியது தான் என்று அவரின் தாயார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். தற்போது மன அழுத்ததிற்காக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகிறார் ஸ்ரீநிதி. ஆனால் சிலர் மனநல மருத்துவமனையில் ஸ்ரீநிதி தற்கொலைக்கு முயன்றதாக செய்தகள் வெளியிட்டனர். இதை பார்த்த. ஸ்ரீநிதியின் தாயார் வேதனையின் உச்சத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் ஸ்ரீநிதி மனநல மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றதாக வரும் செய்தியில் உண்மையில்லை, அவ்வாறு செய்தி வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீநிதியின் தாயார் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற செய்திகளை வெளியிட்டு மேலும் ஸ்ரீநிதியை மன அழுத்திற்கு ஆளாக்கிவிடாதீர்கள் என்றும் அவர் கண்ணீருடன் கூறினார். தன்னையும் பைத்தியம் என்று பலர் எழுதி வருவதாகவும் வேதனையுடன் கூறினார். மகள் மனநல மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றாள் என்ற பொய்யான செய்தியை ஒரு தாயின் மனது எவ்வாறு தாங்கும் ஊடகங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்றும் அவர் கண்ணீருடன் கேட்டார். இனிமேலாவது அவர்களைப் பற்றி தவறாக கமெண்ட் போடுவர்கள் திருந்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்..அவர் பேசிய அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

Youtube Video Code Embed Credits: Indiaglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்