பிரபல திரை ஜோடிகளாக இருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் இருவரும் பள்ளியில் நடக்கும் ஸ்போர்ட்ஸ் டேவில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கின்றனர். அந்த வீடியோவை ஜோதிகா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் திரை உலகின் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தியா மற்றும் தேவ் இருவரின் படிப்பிற்காக சூர்யா மும்பையிலேயே குடியமர்ந்து விட்டார். அவ்வப்போது படப்பிடிப்பிற்காக மட்டும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சென்னைக்கு வந்து செல்கின்றனர் மேலும் ஜோதிகாவின் தாயார் மும்பையில் வசித்து வருவதால் அவரையும் பார்த்துக் கொள்வதற்காக ஜோதிகா அங்கேயே வீடு பார்த்து சென்று விட்டதாக இணையத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் இருவரின் பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.
பச்சை அணியை தலைமையேற்று நடத்திய தியா வெற்றி பெற்று இருக்கிறார். அவர்கள் அணியும் பல போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. அந்த வீடியோவை பகிர்ந்து கேப்டன் தியாவையும், எனது மகன் தேவையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று ஜோதிகா வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் தேவ் மற்றும் தியா இருவரும் முன்னணியில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O