
நடிகை நயன்தாரா இதுவரை தமிழ் திரையுலகில் நடிகைகள் ஒருவர் எட்டிராத உயரத்தை அடைந்தவர். 15 ஆண்டுகள் மேல் இன்றும் முன்னணியில் உள்ளார். இப்போதும் பெரிய ஹீரோ படங்கள் என்றால் இயக்குனர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் நயன்தாரா தான். இதுவரையில் ஒரு கதாநாயகி இதனை ஆண்டுகள் முன்னணியில் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே.
முதலில் ஒன்று இரண்டு பாடல்களில் ஆடிவிட்டு, நாயகனுடன் சுற்றும் நாயகியாக நடித்து வந்த நயன்தாரா அதில் அடைந்த வெற்றியை மேல தனியொரு நாயகியாக நடிக்க முற்பட்டு அதிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். குறிப்பாக ஒரு பெரிய இடைவேளையில் இவர் அவ்வளவு தான் என்று நினைத்த பலரையும் ஆச்சரியப்படுத்தி மீண்டும் ராஜா ராணி படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்து, அதற்கு முன் இருந்த உச்சத்தை விட மிக பெரிய உச்சத்தை அடைந்தார். குறிப்பாக ராஜா ராணி படம் பிறகே தொடர்ந்து கதைக்கு நாயகியாக நடிக்க துவங்கினார்.
மாயா, கோலமாவு கோகிலா, நானும் ரவுடி தான், அறம், விஸ்வாசம், இமைக்க நொடிகள் என படங்களில் முக்கிய வேடம் இவருக்கே அமைந்தது. சில காதல் முறிவுகளை கண்ட இவர், 2015ஆம் நானும் ரவுடி தான் படத்தில் பரிட்சயமான இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் 7 ஆண்டுகள் மேல் காதலில் இருந்தார். கோலிவுட்டின் மிக முக்கிய காதல் ஜோடி இவர்களே.
நானும் ரவுடி தான் படம் அடுத்து அண்மையில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் இணைத்து எடுத்த படமான “காத்துவாக்குல வாக்குல ரெண்டு காதல்” படமும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னையை அடுத்த மஹாபலிபுரத்திலுள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.
இப்பொது தாய்லாந்தில் ஹனிமூனிலுள்ள இருவரும் அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே வெளியான புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகவும் வைரலானது. இந்த புகைப்படங்களும் இப்பொது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அண்மையில் லைக்கா தயாரிப்பின் சார்பில் நடிகர் அஜித்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் படம் எடுக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் ஏகன், பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் படங்களை அடுத்து மீண்டும் 5வது முறையாக நயன்தாரா நடிக்க உள்ளார். அதுபோக நயன்தாரா ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் “ஜவான்” படம் மூலம் அங்கும் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.