இன்றைய தமழ் திரையுலகின் முதல் பெண் நாயகி என்றால் அது நடிகை நயன்தாரா தான். சரத்குமார் நடித்த “ஐயா” படத்தின் மூலம் தமிழிற்கு அறிமுகமான இவர் இரண்டாவது படத்துலேயே ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு என்ற அப்போதைய முன்னணி நடிகர் நடிப்பில் பிரமாண்டமாக உருவான “சந்திரமுகி” படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் தொடர்ந்து அஜித்துடன் பில்லா, ஏகன், விஜயுடன் வில்லு, தனுஷுடன் யாரடி நீ மோகினி, சிம்புவுடன் வல்லவன் போன்ற தொடர் வெற்றிப்படங்களில் நாயகியாக தோன்றி முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தெலுங்கிலும் நடிகர்கள் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், பிரபாஸ், நாகார்ஜூனா, ரவி தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என அங்குள்ள முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபலமானார்.

நடுவில் ஒரு சில கன்னட படமும், மலையாள படமும் நடித்தார். ஆனால் பெரிதாக தமிழிலேயே மார்க்கெட்டை கொண்டிருந்தார். திடீரென சிம்புவுடன் காதல், அந்த காதல் தோல்வி, பின் திருமணமான நடன இயக்குனர் பிரபுதேவாவுடன் காதல், அதிலும் பிரெச்சனை என அடுத்தது பல தனிப்பட்ட வாழ்க்கை பிரெச்சனையால் சினிமாவில் இருந்து ஒதுங்கி போனார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரவுடி தான்” படம் அவருக்கு சிறப்பான வெற்றியை நீண்ட ஆண்டுகளில் பெற்றுத்தந்தது. அதையே ராஜா ராணி, விசுவாசம், பீகில், கோலமாவு கோகிலா போன்ற படங்களும் தொடரவே மீண்டும் விட்ட தன்னுடைய இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அது திருமணம் வரை வந்துள்ளது. வருகிற ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் இவர்களுக்கு கல்யாணம் நடக்க உள்ளது. இந்நிலையில் கடைசியாக வெளியான இவர்களுடைய படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படம் வெற்றி படமாக அமைய இருவரும் அதனை கொண்ட ஊர் ஊராக சுற்றி வருகின்றனர்.
வெளிஊருக்கு சென்று விட்டு, சென்னை திரும்பிய இவருடன் போட்டோ எடுக்க மாற்று திறனாளி பெண் ஒருவர் கேட்க, போனை வாங்கி இயக்குனர் விக்னேஷ் சிவன் பணிவாக நயனையும் அந்த பெண்ணுடன் சேர்த்து செல்ஃபீ எடுத்து கொடுத்துள்ளார்.
பெரும்பாலான நடிகர் நடிகைகள் தனிமையை விரும்பி இது போன்ற நிகழ்வுகளை ஊக்குவிக்காத சமயத்தில், நயன் இப்படி நடந்து கொள்வது, அவரை பாராட்ட வைத்துள்ளது. பலரும் இதனால் தான் இவர் லேடி சூப்பர்ஸ்டார் என தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Video Courtesy – BehindwoodsTV