ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வந்த இருவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். தம்பதிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது தற்போது வழக்கமாகி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் சின்னத்திரை உலகிலேயே பல பேரை சொல்லலாம். அதுபோல வெள்ளி திரையிலும் உடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பழக்கமும் இருந்து வருகிறது.
அதேபோல தற்போது தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வந்த பிரிட்டோ மற்றும் சந்தியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். சீரியலில் கணவன் மனைவியாக வரும் இவர்கள் தற்போது நிஜத்திலும் கணவன் மனைவியாக மாறி இருக்கின்றனர். அ
வர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் தவமாய் தவமிருந்து. குடும்ப உறவுகளை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நாடகத்தில் பசங்க படத்தில் நடித்த சிவக்குமார், அனிதா நாயர், தீனு நிரோஷினி, பாண்டி கமல், யாழினி ராஜன், சங்கீதா பாலன், கானா ஹரி, புவியரசு போன்ற பலர் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பிரிட்டோ மற்றும் சந்தியா ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர். இந்த நாடகத்தில் ரீல் ஜோடிகளாக இருந்த இவர்கள் தற்போது ரியல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், தற்போது கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் திருமணம் இன்று நடைபெற்றிருக்கிறது. பல சின்னத்திரை பிரபலங்களும் அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர் சித்து மற்றும் அவரது மனைவி ஸ்ரேயா அஞ்சான் இருவரும் அவர்களின் திருமணத்திற்கு சென்று அந்த வீடியோவை தங்களது instagram பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்.
பலரும் அந்த தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O