விஜய் டிவியின் இப்போதைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த சேனலில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்தும் அந்த நிகழ்ச்சி இன்னுமும் ரசிகர்களை கவர தருவதில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் காரணமாகவே நீயா நானா கோபிநாத் என அவர் மிக பிரபலம் அடைந்தார்.

தற்போது ஒரு மூத்த ஜெர்னலிஸ்டாக இருக்கும் அவர் பல புத்தகங்களும், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த நிகழ்ச்சி பல சிறப்பான விஷயங்களை குறித்து விவாதித்துள்ளது.
அரசியல், சினிமா, விளையாட்டு, சமூகம், வரலாறு, குடும்பம், நட்பு, காதல், உறவு என இந்த தொடர் பேசிறாத விவாதங்களே இல்லை. பெருமபாலும் குடும்ப உறவுகளும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசும் இந்த நிகழ்ச்சி இந்த வரம் ஒரு கலகலப்பான தலைப்பை கொண்டுவந்துள்ளது.
மனைவியை மட்டம் தட்டும் கணவன், அதை எதிர்க்கும் மனைவி என்ற தலைப்பில் கலகலப்பான இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் டிவி தொலைக்காட்சி இப்பொது வெளியிட்டுள்ளது.
எப்போதும் போல கணவர்கள் மனைவிகள் மேல் குற்றம் சுமத்த, மனைவிகள் அதை மறுத்து பேசுகின்றனர். அதில் ஒரு கணவர், “சார் ஒன்னுமே தெரியாது சார், அவுங்க வீட்ல ஒரு கற்பூரம் கொளுத்த கூட சொல்லித்தரால” என குற்றம் சட்ட, ஒரு கற்பூரத்தை கையில் வைத்து அவருடைய மனைவி அழைத்து “கொளுத்துமா” என கோபிநாத் கூற, பயத்தில் கணவன் தெறித்து ஓடுகிறான்.
சிரிப்பாக ஆரம்பித்தாலும் எப்போதும் போல போக போக சீரியசான விவாதமாக இது மாறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
Video Courtesy – Vijay tv youtube