
ஈக்வடார் நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் விரிவான தகவல் நிகழ்நிலையில் (ஆன்லைன்) பெருமளவில் கசிந்துள்ளதால் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈக்வடார் நாட்டின் 7 மில்லியன் சிறார்கள் உட்பட 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தகவல் இந்த கசிவில் அமல்படுத்தப்பட்டது. மேலும் முன்னோடியில்லாத தேசிய தரவு மீறல் கடந்த திங்கட்கிழமை அன்று நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வழக்கமான திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது இணைய பாதுகாப்பு நிறுவனமான வி.பி.என்.மென்டரால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஈக்வடார் நாட்டின் மொத்தமான மக்கள் தொகை 16.5 மில்லியன் ஆகும். அதாவது அனைத்து நபர்களின் தரவுகளும் கசிந்துள்ளது. கூடுதலாக கசிந்துள்ள தகவல்களில் இறந்த நபர்களின் விவரங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஈக்வடார் மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது.
“இந்த நேரத்தில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய தகவல் என்னவென்றால், இது மிகவும் நுட்பமான பிரச்சினை, இது முழு அரசாங்கத்திற்கும் மாநிலத்திற்கும் ஒரு பெரிய கவலையாக உள்ளது”
என்று ஈக்வடார் நாட்டின் உள்துறை மந்திரி மரியா பவுலா ரோமோ கூறினார். திங்களன்று வெளியிடப்பட்ட வி.பி.என்.மென்டரின் அறிக்கையின்படி, மியாமியில் உள்ள பாதுகாப்பற்ற சேவையகத்தில் இந்த மீறல் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த சேவையகம் (சர்வர்) ஈக்வடார் ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான நோவாஸ்ட்ராட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சேவையகத்தில் இருந்த அந்நாட்டு குடிமக்களின் முழுப் பெயர், தேதிகள், பிறந்த இடம், கல்வி நிலைகள், தேசிய அடையாள அட்டை எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகிய தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு நிலை, இருப்பு மற்றும் கடன் வகை உள்ளிட்ட நிதித் தகவல்களும் கசிந்தன.
ஈக்வடார் நாட்டின் ஜனாதிபதி லெனான் மோரேனோ அவர்களின் தரவுகள் கூட கசிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கேயின் தகவல்கள் கூட கசிந்த தரவுகளில் காணப்பட்டன என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
“தகவல் உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டவுடன் செயல்தவிர்க்க முடியாது”
என்று வி.பி.என்.மென்டர் அறிக்கை கூறுகிறது.