தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நயன்தாரா. சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே சேர்த்து உள்ளார்.தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. மேலும் அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக்கொடுத்து வருகிறது.

இவருக்கு அடுத்ததாக டெஸ்ட் படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.அண்மையில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார் நயன்தாரா.தொடர்ந்து படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா தனது கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடனும் அடிக்கடி நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்போது இவர் நடிகர் தனுஷ் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், தனது திருமண வீடியோ ஆவணப்படமாக நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாகவும், அதில் இடம்பெற்றுள்ள நானும் ரவுடிதான் பாடல் மற்றும் படத்தின் சில காட்சிகள் இடம்பெற்று இருப்பதற்கு, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் பழிவாங்கும் நோக்கத்துடன் அதற்கு அனுமதி கொடுக்காமல் இருப்பதாக புகார் அளித்து உள்ளார். மேலும் 3நிமிட காட்சியை பயன்படுத்த 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
View this post on Instagram