தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹரி. இவர் இயக்கத்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தவர். இவர் இயக்கிய தாமிரபரணி படங்களுக்கு இன்று வரை ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அந்தளவிற்கு தனது திரைக்கதையால் மக்களை மகிழ்விப்பார் ஹரி.

நடிகர் அருண் விஜயை வைத்து இவர் இயக்கிய யானை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இந்நிலையில் விஷாலை வைத்து இவர் இயக்கி இருந்த ரத்னம் படம் மிகப்பெரிய சரிவை இவருக்கு பெற்றுக்கொடுத்து இருக்கிறது. இதனால் அடுத்தப்படத்தின் வேலைகளை கவனமாக தொடங்கி இருக்கிறார் ஹரி. அடுத்த படத்தின் மூலம் ஹரி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் தனது மனைவி ப்ரீத்தா உடன் வீட்டில் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களை ப்ரீத்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
