பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர் சுந்தர்ராஜன் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் ஆர். சுந்தர்ராஜன் இயக்குனராகவும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். 1982 ஆம் ஆண்டு வெளியான பயணங்கள் முடிவதில்லை என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் சென்னைக்கு வந்து பல படங்களை இயக்கியிருக்கிறார். சரணாலயம், வைதேகி காத்திருந்தாள், குங்குமச்சிமிழ், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, என் ஜீவன் பாடுது, தாலாட்டு பாடவா, என்கிட்ட மோதாதே, சீதனம், சித்திரையில் நிலாச்சோறு போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

1981 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது உன்னால் என்னால் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் பூவே இளம் பூவே, இது ஒரு தொடர்கதை போன்ற படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் பாடல்கள் எழுதுவது, பாடுவது, சீரியல்களில் நடிப்பது என்று பிஸியாக இருந்து வருகிறார் ஆர் சுந்தர்ராஜன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் என்கிற சீரியலிலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்கிற இரண்டு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தற்போது டிஆர்பியில் நம்பர் ஒன்னில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ முத்துவின் அப்பாவாக அண்ணாமலை என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

ஆர் சுந்தர்ராஜனுக்கும் டப்பிங் கலைஞராக இருக்கும் துர்கா என்பவருக்கும் 1980 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிகளுக்கு அசோக், கார்த்திக் மற்றும் தீபக் என்கிற மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் கார்த்தி 2004 ஆம் ஆண்டு சாலை விபத்தில் பலியானார்.

இவரது மற்றொரு மகனாக இருக்கும் தீபக் அனபெல் சேதுபதி என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

இவரது மற்றொரு மகன் தனது தந்தை கடைசியாக இயக்கிய சித்திரை நிலாச்சோறு என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

இந்த நிலையில் ஆர் சுந்தர்ராஜனின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.!