எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அறையில் தூங்கிக் இருந்த அப்பத்தாவை காணவில்லை என்று ஜனனி, நந்தினி ஆகியோர் குணசேகரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக வளவன் மற்றும் கதிரை குணசேகரன் அனுப்பி வைத்த நிலையில், அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜீவானந்தத்தின் மனைவி இறந்து விடுகிறார். பின்னர் ஜீவானந்தம் நல்லவர் என்பதை தெரிந்து கொள்ளும் ஜனனி சோகத்துடன் வீடு திரும்புகிறார். அதே சமயம் கதிரும் வீடு திரும்புகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க குணசேகரன் எழுந்து வந்த அப்பத்தாவை மிரட்டி கையெழுத்து வாங்குகிறார். ஜீவானந்தம் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி விட்டதாக ஒரு புகாரை பதிவு செய்து அதில் அப்பத்தாவின் கையப்பத்தையும் பெற்றுவிட்டார். எனவே போலீசார் ஜீவானந்தத்தை தேடி ஒரு புறம் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வீட்டிற்கு வரும் கதிரிடம் நந்தினி நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அப்பத்தாவை காணவில்லை என்று சொல்லி ஜனனி ஆதி குணசேகரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
பிரச்சனை மேல் பிரச்சனை எழுந்து வரும் நிலையில் அப்பத்தா எங்கே போனார்? அவருக்கு என்ன ஆனது? என்பது தெரியவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the below video..!
YouTube Video Embed Code Credits: Sun TV