சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது அதிரை, ஆதி குணசேகரன் முகத்திரையொ கிழித்து தொங்க விடுகிறார். தனது தம்பிகள் மற்றும் தங்கையை வெளியே போக சொல்ல ஆதி குணசேகரன் முயற்சி செய்ய, அனைவரும் தற்போது குணசேகரனுக்கு எதிராக திரும்புகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினி காணாமல் போய் பல நாட்கள் ஆகிறது. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் பதட்டத்தில் இருக்கின்றனர். மருமகள்கள் அனைவரும் தர்ஷினியை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் குணசேகரன் மட்டும் எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கிறார். குணசேகரன் தான் ஒருவேளை தர்ஷினியை கடத்தி வைத்து நாடகம் ஆடுகிறாரோ? என்கிற சந்தேகமும் தற்போது எழுந்திருக்கிறது. இந்த நிலையில் சக்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். அவருடன் ஆதிரையும் வீட்டிற்கு வருகிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், அதிரை ஆதி குணசேகரனை பார்த்து தர்ஷினியை தேடுவதில் நீ மும்முரம் காட்டவில்லை. அதற்கு மாறாக அண்ணியை திட்டுவதில் தான் மும்மூரம் காட்டிக்கொண்டிருக்கிறாய் என்று முகத்திரையை கிழிக்கிறார். அப்போது வீட்டை விட்டு வெளியே போ என்று குணசேகரன் கத்த, நாங்கள் எதற்கு வெளியே போக வேண்டும்? என்று சக்தி பதிலுக்கு திட்டுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழ கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV