சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஆதி குணசேகரன் கரிகாலனை ஓங்கி ஒரு அறை விடுகிறார். இதனால் ‘எதிர்நீச்சல்’ ரசிகர்கள் பலரும் குஷியில் இருக்கின்றனர். சின்னத்திரையில் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது கதைப்படி கரிகாலனுக்கு தனது மகள் தர்ஷனியை இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஆனால் இதில் வீட்டில் உள்ள யாருக்குமே விருப்பமில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தர்ஷினி இன்னமும் பள்ளிப் படிப்பையே நிறைவு செய்யாத நிலையில் கரிகாலனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க குணசேகரன் முடிவெடுத்து இருப்பது குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தர்ஷினியை காரில் மர்ம நபர்கள் சிலர் கடத்தி விடுகின்றனர். இந்த செய்தியை ஈஸ்வரி குணசேகரனுக்கு போன் செய்து கூறுகிறார். அப்போது கரிகாலன், “தர்ஷினியை காணவில்லையா? அப்போது தனக்கு திருமணம் எப்படி நடைபெறும்?” என்று கேட்கிறார். இதனால் கோபமான குணசேகரன் கரிகாலன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.

மேலும் தர்ஷினி ஒரு முறை தான் ஒரு பையனை காதலிப்பதாக கூறிவந்த நிலையில், அந்த பையன் வீட்டிற்கு சென்று நீதான் என் மகளை கடத்தி வைத்திருக்கிறாய் என்று சொல்லி குணசேகரன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV